
பிரபல நடிகரான சசிகுமார் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை ரசிகர்களும் சினிமா துறையினரும் பாராட்டியுள்ளனர். தற்போது சசிகுமார் ஒரு வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வெப் சீரிஸின் படபிடிப்பு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி போலீசார் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து படக்குழுவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி வாங்க சென்றுள்ளனர். அனுமதி கிடைத்த பிறகு மீண்டும் சூட்டிங் தொடங்கப்படும் என தகவல் வெளியானது.