பாஜக கூட்டணியை முறித்த பிறகு அதிமுக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஒவைசியின் AIMIM கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த கட்சி இஸ்லாமிய வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.