
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் புதுக்கோட்டை விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர். இவரும் இவருடைய மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ரம்யாவும் ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் தன் மீது வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என விஜயபாஸ்கரும் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இந்த வழக்குகளும் அதே கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் வந்தது. மேலும் இந்த வழக்கில் நேற்று விஜய் பாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களுடைய வழக்கறிஞர்கள் வாதாடினர். இந்த வழக்கை வருகிறார் 24ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.