பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் பயணமாக மதுரைக்கு வருகிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று அமித்ஷா சாமி தரிசனம் செய்யும் நிலையில் அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திக்கிறார்.

அமித்ஷா மற்றும் அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டமிடப்படவில்லை. ராமதாஸ் மற்றும் அன்புமணி பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சம்பந்தம் கிடையாது. ஆனால் பாஜக அணியில் கண்டிப்பாக பாமக இடம்பெறும். நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என குருமூர்த்தி முயற்சி செய்கிறார்.

எங்கள் கூட்டணியில் தேமுதிகவும் இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அமித்ஷா என்றாலே திமுகவினருக்கு பயம் என்று கூறினார். ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தேமுதிக எங்கள் கூட்டணியில் நீடிக்கிறது என்று கூறினார்.

அதே சமயத்தில் தேமுதிக கூட்டணியில் இணைய இருப்பதாக செய்திகள் ஒன்று பரவி வருகிறது. ஆனால் தற்போது நயினார் நாகேந்திரன் கண்டிப்பாக தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இதேப்போன்று பாமகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்று கூறியுள்ளார்.