வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியாக களம் காண உள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அமைச்சராக கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் பாஜகவின் பங்கு இருக்கும்.

தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்க வில்லை. அது அவர்களது கட்சி பிரச்சனை. அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையில் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார் என கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. எனவே சில காலம் காத்திருங்கள் என கூறியுள்ளார்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எனவே கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.