அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்தலை மூன்று மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. இதன் முதல் கட்டமாக அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்க ஏற்பாடு நடைபெற்றது. பழைய உறுப்பினர் அடையாள அட்டையில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தோடு கையெழுத்தும் இருந்தது.

இந்நிலையில் ஓபிஎஸ் புகைப்படத்தையும் கையெழுத்தையும் நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது. இதனை முன்னால் அமைச்சர் வளர்மதி முதல் அட்டையை பெற்றுக் கொண்டார் .இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.