தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து  முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு விடியலை பார்த்தால் கண்கள் கூசத்தான் செய்யும் என்று கூறினார். அதன் பிறகு ரவுடிகளின் மீது எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றங்கள் பெரும் அளவில் தடுக்கப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் பாதுகாப்பு மிக்க மாநிலமாக திகழ்கிறது. பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினை, காதல் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட விவகாரங்களால் தான் நடந்துள்ளது.

அரசியல் காரணங்கள் மற்றும் ஜாதி மற்றும் மத காரணங்கள் உள்ளிட்ட கொலைகள் முலையிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளது. எனக்கு அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வரும் போது கோபம் வரவில்லை சிரிப்புதான் வருகிறது. பேரிடர் நிதியை தராமல் உள்ள ஒன்றிய அரசை கண்டித்து அவர்களுக்கு கருப்பு சட்டை அணிய துணிவில்லை. ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிய துணி வில்லை. மேலும் இருட்டு அரசியல் செய்யும் அவர்களுக்கு கருப்பு சட்டை அணிய எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று கூறினார்