ஆந்திர மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சுவிதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது தாசில்தார் ஒருவரிடம் மந்திரி அந்தப் பகுதியில் உள்ள பயனாளர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டார். அந்த மந்திரியின் கேள்விக்கு தாசில்தாரால் பதிலளிக்க முடியவில்லை.

 

அந்த நேரத்தில் மற்றொரு அதிகாரி வந்து மந்திரிக்கு பூங்கொத்து கொடுத்தார். ஏற்கனவே கேட்ட கேள்விக்கு அந்த தாசில்தார் பதிலளிக்காததால் மற்றொரு அதிகாரி கொடுத்த பூங்கொத்தை அவர் கோபத்தில் தூக்கி வீசினார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.