
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவருக்கு கடந்த மே மாதம் 17-ஆம் தேதி குஷ்பூ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 9 நாட்கள் கணவர் வீட்டில் தங்கி இருந்த குஷ்பூ திருமண சடங்குக்காக அம்மா வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத நேரம் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்.
இதனையடுத்து தனது மனைவியை காணவில்லை என சுனில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது குஷ்பூ தனது காதலனுடன் காவல் நிலையத்திற்கு வந்து சுனிலை தனக்கு பிடிக்கவில்லை. காதலனோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சுனில் சிறிது நேரம் யோசித்து மனைவியை காதலனுடன் சேர்ந்து வாழுமாறு கூறி அனுப்பி வைத்தார். திருமணத்தின்போது போடப்பட்ட நகைகளை சுனில் குஷ்புவிடம் கொடுத்துவிட்டார். அந்த நகைகளை பெற்று கொண்டு குஷ்பூ காதலனுடன் அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து சுனில் கூறும் போது, ஹனிமூன் போகலாம் என்றெல்லாம் கனவு கண்டேன். குஷ்பூவை சர்ப்ரைஸ் செய்யலாம் என ஆசைப்பட்டேன். அதற்குள் இந்த விவகாரம் தெரிந்து காதலன் உடன் அனுப்பி வைத்துவிட்டேன்.
ஹனிமூனில் உயிரிழந்த ராஜாவைப் போல நான் ஆகவில்லை. ஹனிமூன் போகாமல் நான் உயிரோடு பிழைத்துள்ளேன். இன்னொரு ராஜா ரகுவன்சியாக நான் ஆகவில்லை. எனது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என சுனில் மனம் நொந்து பேசியுள்ளார்.