![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/03/b8951cf2-66a2-43c8-aca6-56b2c1d4aff4.jpg)
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் குளுகுளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் கோவையில் வெப்பநிலை உயர்ந்துள்ளதற்கு திமுகவே காரணம் என புதிய கதைவிட்டிருக்கிறார் அண்ணாமலை. இது அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்பதைத்தான் காட்டுகிறது என மார்க்சிஸ்ட் எம்.பி பி.ஆர். நடராஜன் விமர்சித்துள்ளார்.