
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் காளிதாஸ்(40 சிதம்பரம் கனக சபை நகர் போகும் வழியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் காளிதாசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காளிதாசின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. காளிதாசின் அண்ணன் மகளை பாண்டிச்சேரியாய் சேர்ந்த உறவினரான மணி என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனால் காளிதாஸ் மணியை கண்டித்துள்ளார். மணி காளிதாசன் முடி திருத்தும் கடையில் தான் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இதனால் வேலைக்கு வர வேண்டாம் என காளிதாஸ் மணியிடம் கூறியதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மணி தனது கூட்டாளிகளுடன் இணைந்து காளிதாசை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த வழக்கில் மணி உள்பட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.