
கோடையின் கொடுர வெப்பத்தில் எல்லோரும் குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக 5 முதல் 10 ரூபாய் விலை கொண்ட வண்ணமயமான ஐஸ்கிரீம்கள் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால் இந்த ஐஸ்கிரீம்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோ, அதிர்ச்சியடயவை க்கும் வகையில் உள்ளது. இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மலிவான ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையின் உள்ளக வீடியோவில், தூய்மை மற்றும் சுகாதார முறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் கையுறைகள் மற்றும் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, கழிவுநீர் போலத் தோன்றும் தண்ணீரை பிளாஸ்டிக் வாளிகளில் நிரப்பி, அதில் செயற்கை வண்ணங்கள் மற்றும் சுவைகள் கலந்து, ஐஸ்கிரீம் கலவையை உருவாக்குகிறார்கள். பின்னர், அந்த கலவை பாப்சிகல் அச்சுகளில் ஊற்றப்பட்டு ஃப்ரீசரில் உறைய வைக்கப்படுகிறது. உறைந்தவுடன், ஐஸ்கிரீம்கள் சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.
आपकी सस्ती 5 रू वाली आइसक्रीम कुछ इस तरह से बनकर तैयार होती है।
अगली बार जब आप सस्ती आइसक्रीम खरीदें तो इस विडियो को एक बार जरूर कर लीजिएगा। pic.twitter.com/xX1yFnQG9k
— Dr. Sheetal yadav (@Sheetal2242) June 17, 2025
இந்த காணொளி எக்ஸ் தளத்தில் @Sheetal2242 என்ற கணக்கில் பகிரப்பட்டு, இதுவரை 20 ஆயிரம் பார்வைகள் பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி மற்றும் கோபத்தில் உள்ளனர். ஒரு பயனர், “இது இனிப்பு இல்லை, நோய்களின் அழைப்பு” எனவும், இன்னொருவர், “மலிவு விலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் ஆரோக்கியத்தை புறக்கணிக்கக் கூடாது” எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். பலரும் உணவுப் பாதுகாப்பு சட்டங்களை பின்பற்றாத இந்த வகை தயாரிப்பு மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற வீடியோக்கள் மக்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கள் கடமைகளை தீவிரமாக மேற்கொள்வதற்கான தேவை குறித்தும் சுட்டிக்காட்டுகின்றன. மக்கள், குறிப்பாக பெற்றோர்கள், இனிமேல் மலிவான ஐஸ்கிரீம்கள் வாங்கும் முன் எண்ணி பார்த்தால்தான் நல்லது.