தானே மாவட்டம் உள்லாஸ்நகர் கேமானி காய்கறி சந்தையில், ஒரு வியாபாரி காய்கறிகளை கழிவுநீர் கால்வாயில் கழுவும் வீடியோ ஒன்று வைரலாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகளை வெளிப்படுத்தி, பொதுச்சுகாதாரத்தைப் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.

உள்லாஸ்நகர் மத்திய நகராட்சி (UMC) சுகாதார அதிகாரி மனிஷ் ஹிவாலே, இந்த வீடியோ கேமானி பகுதியில் பதிவுசெய்யப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். அதிகாரிகள், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டு, அவரது அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.