
பாகிஸ்தானில் தொடர்ச்சியாக நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள், அந்நாட்டில் பணவீக்கத்தை உச்ச அளவுக்கு கொண்டு சென்றுள்ளன. இதன் தாக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலைகளில் தெளிவாகக் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே, அங்குள்ள மக்கள், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காய்கறிகள், ரேஷன் பொருட்கள், இறைச்சி உள்ளிட்ட அனைத்தும் கடும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன.
உணவுப் பொருட்கள் விலை பட்டியல் – இந்தியாவுடன் ஒப்பீடு
மாவு (5 கிலோ) – இந்தியா: ₹250 | பாகிஸ்தான்: ₹360
அரிசி (1 கிலோ) – இந்தியா: ₹65 | பாகிஸ்தான்: ₹275
சன்னா பருப்பு (1 கிலோ) – இந்தியா: ₹100 | பாகிஸ்தான்: ₹575
தக்காளி (1 கிலோ) – இந்தியா: ₹40 | பாகிஸ்தான்: ₹81
வெங்காயம் (1 கிலோ) – பாகிஸ்தான்: ₹150
உருளைக்கிழங்கு (1 கிலோ) – பாகிஸ்தான்: ₹120
மேலும், ஒரு முட்டையின் விலை ₹40 ஆக அதிகரித்துள்ளதுடன், கோழி இறைச்சி ஒரு கிலோக்கு ₹750 என விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டிறைச்சியின் விலை ₹2000 ஆக இருப்பது, சாமானிய மக்களின் சமையல் கடனடிப்பதாகவே உள்ளது. இதேபோன்று
சர்க்கரை (1 கிலோ) – ₹200
கடலை மாவு (1 கிலோ) – ₹745
பால் (1 லிட்டர்) – ₹230
நெய் (1 கிலோ) – ₹600
இந்த தரவுகள் அனைத்தும் பாகிஸ்தானில் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளதென காட்டுகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகள் குறைந்து, அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் பலனளிக்காத சூழ்நிலையில், அந்நாட்டு மக்களின் எதிர்காலம் பெரும் சந்தேகத்துடன் காணப்படுகிறது.