
துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது ஒரு வயது மகள் இசபெல்லா சன்பாலுக்கு, ஒரு வயது பிறந்த நாளை முன்னிட்டு இளஞ்சிவப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த சம்பவம், இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ANAX டெவலப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான சன்பால், தனது மகளுக்காக அட்லாண்டிஸில் பிரமாண்டமான பிறந்த நாள் விழாவை நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இந்த விழாவில் நடிகை தமன்னா பாட்டியா, பாடகர் ஆதிஃப் அஸ்லம், ரஹத் ஃபதே அலி கான், நோரா ஃபதேஹி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக வெளியாகிய வீடியோவில், சதீஷ் தனது மனைவி தபிந்தா சன்பாலுடன் மகளுக்கு அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் சாவிகளை வழங்குகிறார். இந்த கார் மெட்டாலிக் இளஞ்சிவப்பு நிறத்திலும், உள்ளே முழுவதும் அதே நிறத்தில் இருக்கைகள் மற்றும் “இசபெல்லாவுக்கு வாழ்த்துகள்” என பொறிக்கப்பட்ட பதக்கத்துடன் வந்துள்ளது. மேலும், காரின் தரையில் “இது இசபெல்லாவுக்காக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு அனுப்பப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், தொழிலதிபரின் குடும்பம் மற்றொரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து, இளஞ்சிவப்பு நிற புதிய காரை பெற்றுக் கொள்வது காணப்படுகிறது. சிறுமி இசையை ரசித்து, கடைக்கு செல்லும் போது நடனமாடும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. அதில் “தந்தையர் தினத்தில் துபாய் தந்தை ஒருவர் வெற்றி பெற்றார்” எனவும், “சதீஷ் சன்பால் தன் மகளுக்காக ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்தார்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு சமூக வலைதளங்களில் வெறுப்பான எதிர்வினைகள் எழுந்துள்ளன. “ஒரு குழந்தைக்கு ரோல்ஸ் ராய்ஸ் பரிசளிக்கப்படும்போது, பசிக்காக கெஞ்சும் தொண்டு நிறுவனங்கள் நினைவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என ஒருவர் எழுதியுள்ளார். “இது செல்வத்தின் பளபளப்பான, ஆனால் அர்த்தமில்லாத வெளிப்பாடு” என்றும், “பணம் தகுதியை வாங்க முடியாது என்பதற்கு இது உதாரணம்” என்றும் பிறரும் விமர்சனம் பதிவு செய்துள்ளனர். “இது மிகவும் மேலோட்டமான செயல்,” மற்றும் “உங்களிடம் பணம் இருந்தால் எதை செய்வதெனத் தெரியாமல் செய்வீர்கள் போல இருக்கிறது” என்ற கருத்துகளும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
View this post on Instagram