
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் அடுத்த ஜூஹி அருகே அடுப்பில் இருந்து வெளியான புகையால் மூச்சுத் திணறி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு குளிர் காரணமாக உணவை சமைத்து விட்டு அடுப்பை அணைக்காமல் வீட்டில் இருந்து ஐந்து பேர் தூங்க சென்றுள்ளனர். மூடப்பட்ட அறையில் அடுப்பிலிருந்து வந்த நச்சு புகையால் உறக்க நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் மீட்கப்பட்ட இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.