
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருவாரூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.