அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக பிசிசிஐ ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் நிலையில் ஆர்டிஎம் என்ற முறையின் மூலம் கூடுதலாக ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரரை மற்றொரு அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் ஆர்டிஎம் என்ற முறையினை பயன்படுத்தி அந்த தொகையை கொடுத்து அந்த வீரரை மீண்டும் அதே அணி தக்க வைத்துக்கொள்ளலாம்.

அதோடு அன் பேக்ட் பிளேயர் குறித்தும் அறிவித்தது. இந்த விதிமுறையின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் தோனியை சேர்க்கப்படாத வீரராக வைக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடங்களான வீரர்கள். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் எம்.எஸ் தோனியை அன் பேக்ட் வீரராக தக்கவைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இதன் காரணமாக எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் நிலவும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனிடம் எம் எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தோனி இதுவரை அடுத்த சீசனில் விளையாடுவது பற்றி எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

நாங்களும் அவர் அடுத்த சீசனில் விளையாட வேண்டும் என்று தான் விரும்புகிறோம். எம் எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் அறிவிக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் எம் எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதை தெரியவந்துவிடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.