
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான நாகேந்திரன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கஸ்தூரி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் நாகேந்திரன் தன் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்துக் கொளுத்திவிட்டார். இந்த தீ நாகேந்திரன் மீதும் பட்ட நிலையில் இருவரும் வலியில் அலறி துடித்தனர்.
நாகேந்திரன் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்த நிலையில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து கஸ்தூரியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.