தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் பகுதியில் லீலாவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சின்னச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். லீலாவதிக்கு கௌசல்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கவுசல்யா தனது கணவர் பிச்சைமுத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கௌசல்யா தனது தாய் வீட்டில் தங்கி ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அடிக்கடி பிச்சைமுத்து தனது மாமியார் லீலாவதி மற்றும் கௌசல்யா ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலை லீலாவதி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லீலாவதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பச்சை முத்து மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..