மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பால்கான் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கோபமடைந்த சில மர்ம நபர்கள் துணை மின் நிலைய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.

இதை ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.