
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டே கவுடா. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் விஜயலட்சுமி ஹரிகிருஷ்ணா என்பவரை காதலித்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஹரிகிருஷ்ணா விஜயலட்சுமியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சமீப காலமாக ஹரி கிருஷ்ணா விஜயலட்சுமியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். வேறு சில பெண்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார். இதுகுறித்து விஜயலட்சுமி தட்டி கேட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் ஹரிகிருஷ்ணா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்புக்கு காரணமான ஹரி கிருஷ்ணா மீது அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் லட்சுமி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரி கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.