
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை UIDAI நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டையை பெற இயலாத கைவிரல்கள் இல்லாத கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசிமோல் பி ஜோஸ் என்ற பெண் ஆதார் வேண்டி புகார் அளித்தார். இந்த புகார் மீதான நடவடிக்கையாக அந்த பெண்ணின் கருவிழி படலங்கள் மற்றும் முக புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஆதார் அட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைரேகைகள் இல்லாத அல்லது கைரேகைகள் கிடைக்காத நிலையில் கண்களில் ஐரிஸ் ஸ்கேன் மூலம் ஆதாரை பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை MyAadhar என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ஆதார் புதுப்பிப்பு மற்றும் தவறாக உள்ள பயனர் தனிப்பட்ட விவரங்கள் மாற்றும் சேவை இன்னும் மூன்று நாட்களில் நிறைவடைய உள்ளது. எனவே இந்த ஆன்லைன் சேவைகளுக்கு இனிய ஐம்பது ரூபாய் முதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது