
தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கி முடிவடைய உள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது வழக்கம். சபரிமலை பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நற்செய்தியை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டாம் பாதியில் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இனி மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.