
மக்களிடையே நாணயங்களில் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நாணய வெண்டிங் மெஷின் முறையை ரிசர்வ் வங்கி கொண்டுவருகிறது.
ரூபாய் நாணயங்களை விநியோகம் செய்யும் இயந்திரங்களை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நாணய இயந்திரங்கள் யுபிஐ அடிப்படையில் இயங்கும். அதாவது இயந்திரங்களில் நாணயம் பெற வேண்டும் என்றால் அதற்கு யூபிஐ ஆப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடியாக பணம் கொடுத்து நாணயமாக மாற்றிக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு 50 ரூபாய்க்கு நாணயம் தேவை என்றால் நாணய எந்திரத்தில் உங்கள் மொபைலில் யுபிஐ ஆப் வாயிலாக க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து 50 ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக 50 ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் உங்களுக்கு இயந்திரத்தில் கிடைக்கும். முதற்கட்டமாக சோதனை முயற்சியில் நாட்டின் 12 நகரங்களில் இந்த மெஷின் வைக்கப்பட இருக்கிறது. இதில் இருக்கும் QR CODE ஐ UPI ஆப் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால், அது நாணயங்களாக கிடைக்கும். இந்த திட்டம் சோதனைக்கு பின் நடைமுறைக்கு வரும் என்றுள்ளார் RBI கவர்னர் சக்திகாந்த தாஸ்.