அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாதம் மாதம் அவர்களுடைய சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த தொகையானது அவர்கள் பெறும் ஊதியத்தை பொருத்து மாறுபடும். தொகையானது அவர்களுடைய பணிக்காலம் முடிவடைந்த பிறகு மொத்தமாக திரும்ப கொடுக்கப்படும். ஆனால் கடைசியில்  முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த நிலையில் இபிஎப் அமைப்பானது அவ்வப்போது பிஎஃப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் உங்களுடைய செல்போன் யுனிவர்சல் கணக்கு எண்ணில் பதிவு செய்யப்பட்டிருந்தால் 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்பதை சரி பார்க்கலாம். மிஸ்டுகால் கொடுத்த பிறகு உங்களுக்கு இபிஎப் கணக்கிலிருந்து ஒரு மெசேஜ் வரும். அதில் உங்களுடைய பிஎஃப் கணக்கு இருப்பு குறித்த தகவல் இருக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசமானது. ஆனால் இதை பயன்படுத்த வேண்டும் என்றால் யுனிவர்சல் கணக்கு எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மெசேஜ் மூலமாக பெற விரும்பினால் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். பதிவு செய்யப்பட்ட செல்போனில் இருந்து என்று EPFOHO UAN ENG டைப் செய்து கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.