
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா என்னும் பதினாறு வயது பெண் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று வந்தார். இவருடைய வசீகரிக்கும் கண்களைப் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலானது. இதனையடுத்து மோனலிசா ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இவரோடு சேர்ந்து பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள், இவருடைய வீடியோ, புகைப்படம் என ஒவ்வொன்றாக இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இந்தூருக்கு சென்று மோனாலிசாவை பார்த்து தன்னுடைய படத்தின் ஹீரோயினாக நடிப்பதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளார், முதல் படத்திற்காக மோனாலிசாவுக்கு 21 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு முன்பணமாக ஒரு லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோனாலிசாவை தேடி விளம்பரப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க மோனலிசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அதற்காக அவருக்கு 15 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.