மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போரிவாலி நகரத்தில் பெஸ்ட் பணியாளர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அறைகளை ஒதுக்குவது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்குள் ஒரு பெண்களின் கும்பல் கூட்டமாக நுழைந்துள்ளனர்.

அங்கு சென்று அவர்கள் அந்த 13 வயது சிறுமியையும் அவரது தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பின்னர் அந்த சிறுமி நாப்கின் மற்றும் உள்ளாடைகளை பின்பக்கம் போட்டுள்ளார் என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை சோதனை செய்கிறோம் எனக்கூறி அவரின் ஆடைகளை கலைந்து தகாத இடங்களில் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். பெண்கள் குழுவே ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

முதலில் அந்த சிறுமியின் தாய் புகார் கொடுத்து வாபஸ் பெற்று விட்ட நிலையில் மீண்டும் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி போலீசார் எட்டு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.