
பெங்களூரைச் சேர்ந்த 13 வயது பைக் ரைடர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரிஷ். இவர் நேற்று பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் 2023 இன் போது அவர் விபத்தில் சிக்கினார். பந்தயம் தொடங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஸ்ரேயாஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி வேர்ல்ட் பைனலில் பங்கேற்ற பின்னர், பைக் பந்தயத்தில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்திருந்தார்.