உலகில் எவ்வளவோ பணக்கார நாடுகள் இருந்தாலும் வறுமையில் வாடக்கூடிய நாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் உலகின்  ஏழ்மையான நாடுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில் 85 சதவீதம் பேர்  மிகக் கொடுமையான வறுமையால் தவிக்கிறார்கள். இங்கு பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியிருக்கிறது. இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல் தவிக்கிறார்.

இந்த மக்களின் ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் வெறும் 14,000 ரூபாய் தான். ஒருவர் நாள் முழுவதும் உழைத்தால் கூட அவருக்கு முழுமையாக 50 ரூபாய் கூட சம்பளம் கிடைக்காது. இந்த நாட்டை கடந்த காலங்களில் பிரிட்டனும், அமெரிக்காவும் ஆட்சி செய்தது. இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நல்ல பொருளாதார நிலையில் தான் இருந்தது. ஆனால் கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பொருளாதார நிலைமை மோசமானது. அதாவது கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அங்கு இன கலவரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. மேலும் இந்த நாட்டைப் போன்று சோமாலியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளும் வறுமையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.