
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சில பக்தர்கள் பாதயாத்திரை ஆக சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ரங்காம்பேட்டை மங்காபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் அந்த பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. அந்த சமயத்தில் கடும் பனிப்பொழிவு நிலவியதால் டிரைவர் தவறுதலாக அவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோரங்களில் நடந்து செல்லும் பக்தர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.