
ஈரோட்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இங்குள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இதன் அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இதில் 19வது கொண்டை ஊசி வளைவு அருகே ஒரு சாலை ஓரம் தடுப்பு சுவர் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு சிறுத்தை புலி ஒன்று நடந்து சென்றது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்தி வைத்தனர். அதில் ஒரு வாகன ஓட்டி சிறுத்தை நடமாடுவதை தன்னுடைய போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சிறிது நேரம் அங்கு நடமாடிய சிறுத்தை புலி நீண்ட நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.