நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று விஜய்யின் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “அனைவருக்கும் உணவு கிடைத்திடவும், பட்டினியில்லா உலகை ஏற்படுத்துவதற்காகவும் சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.