
கேரள மாநிலத்தில் உள்ள புத்தன்வேலிக்கரை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியின் மார்க்சிஸ்ட் செயலாளராக உள்ளார். இவரது வீட்டிற்கு கடந்த 12ஆம் தேதி 4 வயது சிறுமி விளையாடுவதற்காக வந்துள்ளார். அப்போது சுப்பிரமணியன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான சுப்பிரமணியனை தேடி வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் சுப்ரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சுப்பிரமணியன் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.