
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து சிதறியது.
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, 2016 முதல் 2021 வரை இரண்டு முறைகள் குஜராத்தின் முதல்வராக பதவி வகித்தவர். அவர் தற்போதும் ராஜ்கோட் மேற்கு தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். இந்த நிலையில் பயங்கர விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.
டெக்கன் ஹாமில் நடந்த இன்ட்ரா ஸ்குவாட் ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள், துணை ஊழியர்கள் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் கருப்பு பட்டை அணிந்து மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.