மத்தியப்பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கோலராஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை பரிதாபமான விபத்து ஒன்று நடைபெற்றது. அதாவது 23 வயதுடைய அங்கித் குப்தா என்ற இளைஞர், ஸ்கூட்டரில் வீட்டிற்கு செல்லும் வழியில், அதிவேகமாக வந்த ஒரு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் புதன்கிழமை மாலை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கு முன், லாரி முதலில் ஒரு ஐஸ்கிரீம் வண்டியை மோதியது. அதன் பின்னர், அங்கித் சென்ற ஸ்கூட்டரை மோதியது. பாதுகாப்பு எச்சரிக்கைகளையோ, வேக கட்டுப்பாடுகளையோ பின்பற்றாமல் வந்த லாரி, நேரடியாக இளைஞரை மோதிச் சென்றது. இதனால் அருகில் இருந்த மக்கள் மற்றும் கடையோரத்தில் இருந்தவர்கள்  கீழே வீழ்ந்தனர். அங்கித், தனது பெற்றோரின் ஒரே மகனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

விபத்தை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் AB சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை NH-46 ஆகியவற்றை மறித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இந்த பகையை அடக்குவதில் சிரமம் அடைந்தனர். தற்போது விபத்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், மக்கள் கோபம் மேலும் அதிகரித்துள்ளது.

கோலராஸ் இன்ஸ்பெக்டர் ரவி சவுகான் தெரிவித்ததாவது, “விபத்தில் உயிரிழந்த அங்கித் மீது லாரி மோதியதற்குப் பிறகு, நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். டிரைவராக இருந்த விபின் தாகத், ராஜஸ்தானின் வாறா பகுதியைச் சேர்ந்தவர். அவர் குடிபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் மீது கொலை குற்றச்சாட்டில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்,” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.