கேரள மாநிலம் திருச்சூரில், சனிக்கிழமை மதிய நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் விபத்து நடந்துள்ளது. கனமழையில் குடை பிடித்து பஸ்ஸ்டாப்பில் பஸ்ஸிற்காக காத்திருந்த பெண்கள் மீது, திடீரென வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று நேராக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில், வீதியில் மழையில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக  மோதுகிறது. அருகில் இருந்த ஒரு காவலர்  அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்கும் காட்சியும், பொதுமக்கள் அலறி ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளன.

“>

காயமடைந்தவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்திற்குப்பின் பஸ் ஓட்டுநர் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து பஸ்ஸை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சூரில் பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது