இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரத்தில் கோபத்தை வெளிக்காட்டும். கொடிய விஷம் உடைய பாம்புகள் கூட மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு தற்போது வந்து இடையூறு அளிப்பது மட்டுமல்லாமல் சமையலறை மற்றும் வாகனம் என பல இடங்களில் பதுங்கி இருந்து அச்சுறுத்துகிறது.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தண்ணீரிலிருந்து தரைக்கு வந்த மீன் ஒன்று தன்னுடைய உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் வேகமாக வந்த பாம்பு மீனை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி கடைசியில் தண்ணீருக்குள் கொண்டு சேர்த்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.