
பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை மேற்கொண்டுள்ளார். சகா பயணிகளிடம் கைவரிசை காட்டுவதற்காக இவர் விமான பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் உஷா ரங்னாணி கூறுகையில், விமான பயணிகளை குறி வைத்து திருடி வந்த ராஜேஷ் கபூரை பஹர் கஞ்சில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தான் திருடிய நகைகளை அவர் அந்த பகுதியில் மறைத்து வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் விமான பயணிகளின் மதிப்புமிக்க பொருட்கள் திருடு போவது தொடர்பாக புகார்கள் அதிகரித்த நிலையில் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டு சம்பவங்கள் நடந்த விமானங்களில் ராஜேஷ் கபூர் பயணித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் ராஜேஷ் கபூர் இதுபோன்று பல்வேறு விமானங்களில் பயணித்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டில் கிடைத்த பணத்தை கொண்டு சூதாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் மீது 11 வழக்குகள் உள்ளது. விமான பயணத்தில் மூத்த குடிமக்களை குறி வைத்து இவர் கைவரிசை காட்டி வந்துள்ளார் என தெரிவித்துள்ளார்