![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/08/Tamil_News_large_2179807.jpg)
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
அன்றைய தினம் மண்டபம் ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி மண்டபம் கலோனியர் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அங்கு முன்னேற்பாடு பணிகளை தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி பார்வையிட்ட நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அங்கு வருகை தருகிறார்.