கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள காவலூர் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அஜித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கிய அஜித்குமார் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்தேடலுக்குப் பிறகு அஜீத் குமாரை சடலமாக மீட்டனர். அதன் பின்னர் அவரது சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.