காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த அபிநயா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிநயாவின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் அபிநயா கிடைக்காததால் முருகேசன் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அபிநயாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.