வேலைக்கு செல்லாத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சனம்பட்டியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரஞ்சிதா(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தருனேஷ்(4) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக அருண்குமார் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.