மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூர் பொதிகை நகரில் டிரைவரான குமரவடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வுக்கு படிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியை பெற்றோர் நன்றாக படிக்கும் நீ இப்படி செல்போன் பார்க்கக் கூடாது. 12-ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணில் தான் உன்னுடைய எதிர்காலம் இருக்கிறது.
எனவே செல்போன் பார்க்காமல் நன்றாக படி என கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.