திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு பகுதியில் மாங்காளி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தியின் பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர். இதில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று ஆர்த்தி கூறியுள்ளார். இருப்பினும் அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். எனவே ஆர்த்தியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக இருந்தது.
இந்நிலையில் ஆர்த்தி தனது கை, கால் மற்றும் முகத்தில் தோல் வியாதியால் கருப்பாக இருப்பதால் திருமணம் செய்ய விருப்பம் இல்லாத அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.