இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் அண்ணாநகரில் பிளம்பரான சிவசங்கர்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவசங்கர் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.

இதனால் மன உளைச்சலில் இருந்து சிவசங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவசங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply