சுய உதவி குழுவின் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் பஞ்சாயத்து வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புற சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பாக மாநில, மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் குழு கூட்டங்கள் நிர்வாக சுழற்சி முறை, தொழில் தரம் மற்றும் தணிக்கை நிதி, வரவு செலவு வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி விழிப்புணர்வு விவரங்கள், கிராம சபை பங்கேற்பு சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம் மாற்று திறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுவினர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 25-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும். 25-ஆம் தேதிக்கு பின் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. அதனால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுய உதவி குழுவினர் கூட்டமைப்பினர் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply