தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது பாபு திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என பாபுவுடன் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.