72 வது வயதில் ஏன் பெரியார் திருமணம் செய்துகொண்டார்..?? காரணம் தெரியுமா..??

பெரியார் ஏன் தனது 72வது வயதில் திருமணம் செய்து கொண்டார்  என்பதற்கான காரணம் குறித்து  இந்த செய்தி  காண்போம்.

பெரியார் மீது தீவிர மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் அவரது கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்பி மகிழ்ந்த தொண்டர்கள் தமிழக மக்கள் என பலர் பெரியார் மணியம்மை திருமணத்தை எதிர்த்தவர்கள். அந்த திருமணத்தின் காரணத்தால் பெரியாரின் வட்டத்திலிருந்து விலகி சென்றவர்கள் பலர் இருக்கின்றனர். தனது முதல் மனைவி நாகம்மை பெரியாருக்கு 54 வயது இருக்கும் போதே இறந்து விட்டார்.

Image result for periyar maniammai

அந்த காலகட்டத்திலேயே உறவினர் நண்பர்கள் என பலர் பெரியாரை திருமணம் செய்துகொள்ள கூறியபொழுது முழுமனதுடன் மறுப்பு தெரிவித்து இருந்தார். பெரியார் தனது வாழ்க்கை மற்றும் அதில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் நிச்சயம் தனது துணை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெகுவாக அறிந்திருந்தார் பெரியார். ஆனால் பிறகு தனது 70 வயதில் மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொள்ள காரணம் என்பதைப் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 70 வயதில் பொதுவாக முதியவர்களுக்கு என்னென்ன உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுமோ அவை எல்லாம் பெரியாருக்கும் ஏற்பட்டது. 

Image result for periyar maniammai

அந்நாள் வரை இயக்கம் கொள்கைகள் போராட்டங்கள் குறித்து மட்டுமே கவனம் கொண்டிருந்த பெரியார் தனக்கு பின் யார் அனைத்தையும் வழிநடத்திச் செல்வார்கள் என்ற எண்ணம் அப்போது தான் பிறக்க துவங்கியது. மக்கள் மேம்பாட்டு போராட்டங்கள் மற்றும் அதற்கான சிந்தனைகள் ஒருபுறம் அடித்தட்டு மக்கள் மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட கழகம் மற்றும் அதன் எதிர்காலம் மறுபுறம்.

Related image

தனது மரணத்திற்குப் பிறகு தனது சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டம் ஒருபுறம் என பெரியாரின் மனதை பல சிந்தனைகள் சூழ்ந்திருந்தன. பெரியாருக்கு பெரும் சொத்து இருந்தது. அதை அவரது இறப்புக்கு பிறகு தனது கழகத்திற்கு எழுதி வைத்து விட்டார். அதனால் கழகமும் சிறப்பாக இயங்க வழி வகுக்க முடியும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார் பெரியார். இதற்காக உடனடியாக தனது வழக்கறிஞரை வரவழைத்து கோப்புகள் ஏற்பாடுகள் செய்ய கூறினார்.

Related image

ஆனால் பெரியார் அறிந்திருக்காத ஒரு சட்ட சிக்கலை எடுத்துரைத்தார் அவரது வழக்கறிஞர். பெரியாருக்குப் பிறகு அவரது ரத்த சொந்த கையொப்பம் இருந்தால்தான் சொத்துக்கள் கழகத்தின் பெயருக்கு மாற்ற முடியும் என்று கூறினார் பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை வெகுகாலம் முன்பே இறந்துவிட்டார். பெரியாருக்கு பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது. இந்த இரண்டு வாய்ப்புகளும் இல்லாமல் போயின.

Related image

ஆகவே ஒன்று பெரியார் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் கழகத்திற்கு சொத்து எழுதி வைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் நிச்சயம் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டிருந்தார் பெரியார். இதற்காக ராஜாஜி உட்பட தனது நெருங்கிய வட்டத்தினர் பலரிடம் இது குறித்து விசாரித்தார் பெரியார். பெரும்பாலானவர்கள் இது அவ பெயரை பெற்றுத் தரும் வேண்டாம் என்றும் நினைக்கிறார்கள்.

Related image

ஆனால் கழகத்தின் எதிர்கால மட்டுமே கருத்தில் கொண்டு வேறு வழியில்லை என்பதால் திருமணம் செய்துகொள்ள திட்டத்தை ஏற்கிறார். யாரை திருமணம் செய்வது என்ற பேச்சின்போது மணியம்மை தானாக முன் வருகிறார். அவர் பெரியாரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தவர். நான்தானே பெரியாரை கவனித்து வருகிறேன் இது வெறும் சட்டத்திற்கான பதிவு மட்டும் தானே அதைத் தாண்டி எங்கள் உறவானது எப்பொழுதும் போல தான் தொடரப் போகிறது என்று கூறி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார் மணியம்மை.

Related image

பெரியாரின் திருமணச் செய்தி அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இருந்த பிளவை இன்னும் பெரிதாக்கியது. சென்னை தியாகராயநகரில் ஏப்ரல் 9 1949 அன்று பெரியாருக்கும் மணியம்மைக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது. இந்த செய்தி கேட்ட பிறகு அண்ணாவிற்கும் பெரியாருக்கும் இடையே இருந்த உறவானது ஏறத்தாழ முடிவு பெற்றது என்று தான் கூறவேண்டும். மேலும் பெரியார் தனது மகள் வயதிலான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற அவப்பெயர் உண்டானது. ஆனால் பெரியாரின் திருமணம் செய்து கொண்டதற்கு ஒரே காரணம் தனது சொத்து கழகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே.