கொரோனோ வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்புபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்களிடம் பெரும் அளவில் பரவிக் கிடக்க அவ்வப்போது வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக பயமுறுத்தல் என்பது அதிகமாகி வருகிறது. இந்த வதந்திகளை நம்பி வீணாக மக்கள் பதற்றம் அடைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சைபர் கிரைம் துறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனோ வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்புவது யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.